வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

22/2/2013 tmmk news


பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மூலம் ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்தது. முல்லிவாய்க்காலும் முள்வெளி முகாம்களும் உலகம் உள்ளளவும் அதனை உணர்த்திக் கொண்டே இருக்கும்.
இலங்கை சிங்கள இனவாத அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேவ்ண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் கூக்குரலாகவும் போர்க்குரலாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பினும் அப்பாவித் தமிழனின் அழுகுரல் இந்த பூமிப்பந்தில் யாருக்கும் எட்டவில்லை. இந்தியா இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டும் தமிழர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இக்கொடுஞ்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்துகிறது.
நாளை மாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி அருகிலிருந்து முற்றுகை ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது.
மனிதநேயமுள்ள அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: மத்திய அரசின் முடிவு பாராட்டுக்குரியது

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசின் முடிவை மனிதந...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

மமக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் 19.02.2013 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பேரா...

பிப்ரவரி 20,21- நாடு தழுவிய வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

 
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடத்தும்...

பெட்ரோல் விலையேற்றம் அதனால் தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றமும் அதனால் தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியும் மக்களின் கடுமையான அதிருப்தியையும் அதனால் நாள...

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
 

ஆம்பூர் - மேம்பாலம் கட்டும்பணியை பார்வையிட்டார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், அ.அஸ்லம் பாஷா

ஆம்பூர்  - மேம்பாலம் கட்டும்பணியை பார்வையிட்டார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், அ.அஸ்லம் பாஷா பிப்.20 ஆம்பூர் தொகுதி. மாதனூர் ஒனறியத்திற்குட்பட்ட, இராமநாயினி குப்பம் ஊராட்சியில், வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த அது, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், அ.அஸ்லம் பாஷா அவ...
More:

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள்

அப்சல் குரு தூக்கு: விடை தெரியாத வினாக்கள் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு, 9.2.2013 சனிக்கிழமை காலை 7.56க்கு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப...
More:

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவேண்டும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனிடம் ஜவாஹிருல்லா கோரிக்கை

அழியும் இனம் என்று அறிவிக்கப்படாததால் கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மந்திரியிடம் மனு:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிரு...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக